POST STROKE DEPRESSION

திடீர் மன அழுத்தம் (ACUTE STRESS)

நாம் எல்லோரும் சிறு சிறு பிரச்னைகள் வரும்போது சோர்ந்து போகிறோம். கலக்கமும், திகிலும், நம்மை ஆட்கொள்கிறது. ஆகிலும், பிரச்னைகள் நீங்கும்பொழுது தெளிவு பிறக்கிறது. மீண்டும் மகிழ்ச்சி அடைகிறோம். இது சில மணி நேரங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை செல்லலாம். இந்த பிரச்னைகள் ஒரு மனிதனின் உடல் நலத்தை அல்லது மன நலத்தைப் பாதிக்கும்படியாக அமையலாம். மனதளவில் இது ஒருவருடைய தற்பாதுகாப்பையோ அல்லது தான் நேசிக்கும் ஒருவரைப் பாதிக்கும்படியாகவோ அமையலாம்.

உதாரணமாக, accidents, சண்டைகள், வேலை இழப்பு, சமுதாயத்தில் தன் மதிப்பைப் பாதிக்கும்படியான ஒரு நிகழ்வு, கடன் பிரச்னைகள் போன்றவைகள். இது போன்ற திடுக்கிடும் காரியங்கள் நம் அனைவரையும் சில நாட்கள் பாதிக்கக் கூடியவைகள். பாதிப்பும் நபருக்கு நபர் வித்தியாசப்படும்.

Generally, பிரச்னையைக் கேள்விப்பட்ட உடன், ஒரு திகைப்பு, பயம், கலக்கமும் ஏற்படலாம். அதன் பின்பு தலை சுற்றுவது போல் ஒரு உணர்வு ஏற்படலாம். நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்குப் பிறகு அந்த நபர் அதிக பயம் கொண்டவராயும், நெஞ்சு படபடவென்று அடிப்பதைக் காணலாம். அதிக வியர்வை சொரியலாம். தனது உடையிலேயே உணர்வில்லாமல் சிறு நீர் கழித்து விடலாம். மற்றும் சில நபர்கள், இதற்கு எதிர்மாறாக, வெறி கொண்டவர்போல, அங்கும் இங்கும் ஒடவும் மிகச் சத்தமாகக் கூச்சல் போடவும் செய்யலாம். பொதுவாக இப்படிப்பட்ட வித்தியாசமான மணிக்கு மணி மாறும் உணர்வுகள் அனைத்தும் 1-3 நாட்களுக்குள் மறைந்துவிடும்.